புனித சூசையப்பரைக் குறித்து மன்றாட்டு
தயைமிகுந்த முதுபெரும் தந்தையாகிய புனித சூசையப்பரே! உம்மை மன்றாடி உம் அடைக்கலத்தைத் தேடி உம்மிடத்தில் தாம் இரந்து கேட்டதை அடையாமற் போனதில்லை என்று புனித தெரேசம்மாள் உறுதியாகக் கூறியதை நினைத்தருளும். என் அன்புள்ள தந்தையே! இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு, நான் உம்முடைய திருவடியை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்து அழுது பாவியாயிருக்கிற நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது திருமுன் பணிகிறேன். மிகவும் இரக்கமுள்ள புனித சூசையப்பரே! என் மன்றாட்டைப் புறக்கணியாமல் கருணையோடு கேட்டுப் பெற்றுத் தந்தருளும். -ஆமென்.
Comments
Post a Comment