நன்மரணத்துக்காகச் செபம்
இறைவரங்களால் நிறைந்த புனித சூசையப்பரே, வாழ்க! ஆண்டவரும், ஆண்டவருடைய திரு அன்னையும் உம்முடனே, மனிதர்களுக்குள் ஆசீர்பெற்றவர் நீரே. உம்முடைய துணைவியின் கனியாகிய இயேசு ஆசீர் நிறைந்தவரே. கன்னித்தாயின் தூய கணவராகிய புனித சூசையப்பரே! உம்முடைய ஊழியரும் பிள்ளைகளுமாயிருக்கிற எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். இயேசு கிறிஸ்து, கன்னி மரி இருவருடைய திருக்கைகளில் மரணத்தை அடைந்தவர் நீரே, எங்களுக்கு இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் உதவியாயிரும் - ஆமென்.
Comments
Post a Comment